முதல் நாள்

காலை 8.00:- மணி காலை சிற்றுண்டி ( இட்லி அல்லது வெண்பொங்கல் + வடை + டீ ) ஆழியர்

காலை 9.00:- ஆழியர் அணை பார்க்

aliarpark

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே வால்பாறை மலை அடிவாரத்தில் ஆழியார் அணை மற்றும் பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள அழகிய பூங்கா, செயற்கை நீர்வீழ்ச்சி, மீன் காட்சியகம் (Aquarium), சிறுவர் பூங்கா ஆகியவை குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல மிகச்சிறந்த இடங்களாகும். 

காலை 10.00 :- கவி அருவி

monkey fallse

பொள்ளாச்சி – வால்பாறை சாலையில் ஆழியார் அருகே அமைந்துள்ள ஒரு அழகான சிறிய நீர்வீழ்ச்சியாகும். இது குரங்கு அருவி என்றும் அழைக்கப்படுகிறது. 

அமைவிடம் மற்றும் சூழல்

  • இடம்: ஆனைமலை புலிகள் காப்பகத்தின் (Anaimalai Tiger Reserve) பொள்ளாச்சி வனச்சரகப் பகுதியில் உள்ளது.
  • சிறப்பம்சம்: அடர்ந்த மேற்கு தொடர்ச்சி மலைகளின் பசுமையான சூழலில் அமைந்துள்ளது.
  • நீர்வரத்து: மலைப்பகுதிகளில் பெய்யும் பருவமழையைப் பொறுத்தே அருவியின் நீர்வரத்து இருக்கும். 

சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு

  • பாதுகாப்பு: மழைக்காலங்களில் அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதிப்பது வழக்கம்.
  • கட்டுப்பாடுகள்: வனப்பகுதி என்பதால் இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. மேலும், காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

மதியம் 12.00:- வாட்டர்பால்ஸ் photo point:

whatsapp image 2025 08 15 at 4.49.19 pm (2)

மதியம் 1.00:- reaching to Homestay or Hotel for fresh up

மதியம் 1.30 :- மணி மதிய உணவு (Lunch)

மதியம் 2.30  மணி

Thalanar View Point,

thalanar

பயணிகளிடையே “Thalanar Snow Point” என்று பரவலாக அறியப்படும் இந்த இடம், வால்பாறை நகரத்திலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அமைதியான மற்றும் மயக்கும் பனிமூட்டத் பள்ளத்தாக்காகும். உருளிக்கல் அருகே சுமார் 1,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பார்வைத்தளம், பொள்ளாச்சி–வால்பாறை பிரதான சாலையிலிருந்து 6 கிலோமீட்டர் விலகிச் செல்லும் சாலையின் மூலம் அடையக்கூடியது. கூட்டம் குறைவாக இருக்கும் இயற்கை அழகை அனுபவிக்க விரும்புவோருக்கு இது இன்னும் மறைந்திருக்கும் ஒரு அற்புதமான இடமாக திகழ்கிறது.

          ஆனைமலை மலைத்தொடர்கள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகளின் விரிந்த உயர்நிலை காட்சிகளை வழங்குகிறது. வானிலை தெளிவாக இருக்கும் நாட்களில், செழித்த பசுமையின் நடுவே அமைந்துள்ள சோலையார் மற்றும் பரம்பிக்குளம் அணைகளையும் தொலைவில் காண முடியும்.

பனிமூட்டமான சூழல்: “Snow Point” என்ற பெயருக்கு ஏற்ப, இந்த பகுதி அடிக்கடி அடர்ந்த பனிமூட்டத்தால் மூடப்பட்டிருக்கும். குளிர்ந்த மலைக்காற்றும் நகரும் மேகங்களும் சேர்ந்து கனவுபோன்ற சூழலை உருவாக்குகின்றன; இது புகைப்படக்காரர்களுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் மிகவும் பிடித்தமானதாகும்.

சாகசமிகு பயணம்: தலனார் செல்லும் பாதையே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகும். பார்வைத்தளத்துக்குச் செல்லும் சாலை இயற்கை அழகால் நிரம்பியிருந்தாலும், அது மிகவும் குறுகலானதும் கூர்மையான வளைவுகளைக் கொண்டதுமானதாகும். மணம் வீசும் தேயிலைத் தோட்டங்களும் அடர்ந்த காடுகளும் வழியாகச் செல்லும் இந்த சாலையில், குறிப்பாக பனிமூட்டமான நாட்களில் மிகுந்த கவனத்துடன் வாகனம் ஓட்ட வேண்டும்.

பார்வையாளர் தகவல்கள்: இந்த பார்வைத்தளம் பொதுவாக காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை திறந்திருக்கும். பயணிகள் ஒருவருக்கு சுமார் ₹100 நுழைவு கட்டணத்துடன், வாகனக் கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும்.

மாலை 5 :- மணி டீ time at வால்பாறை

koolangal

மாலை 5.30:- மணி கூழாங்கல் ஆறு

koolankal

     வால்பாறை நகரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஆறு, குளிர்ந்த நீர், ஆழமற்ற தன்மை மற்றும் படிகத் தெளிவான நீர் ஓட்டத்திற்குப் பெயர் பெற்றது. இதன் கரைகளில் கூழாங்கற்கள் நிறைந்து காணப்படுவதால் இப்பெயர் பெற்றது

மாலை 7.30:- Homesay திரும்புதல்.

இரவு 8.00:- இரவு உணவு   

இரவு 9.00:- (campfire + டீ)

இரண்டாம் நாள்

காலை 7.00 :- மணி காலை சிற்றுண்டி ( இட்லி அல்லது பூரி + டீ )

காலை 8.00 :- மணி ஆதிரப்பள்ளி நோக்கி பயணத்தை தொடங்குதல்

காலை 9.00:- சோலையாறு அணை

whatsapp image 2025 09 01 at 3.47.52 pm (2)

சோலையாறு அணை கோவை மாவட்டத்தின் ஆணை மலையில் உள்ள மலை வாசஸ்தலமான வால்பாறையில் இருந்து 20 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. இது ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை ஆகும். இதன் மொத்த கொள்ளவு 160 அடி ஆகும். சோலையாறு அணை பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமாக உள்ளது. இந்த நீர் தேக்கத்தில் உள்ள உபரி நீர் பரம்பிக்குளம் நீர் தேக்கத்தை சென்று அடைகிறது.

காலை 11.00:- வாழச்சால் அருவி

vachachal

காலை 12.00:- ஆதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் சாலக்குடி ஆற்றின் மீது அமைந்துள்ளது. “தென்னிந்தியாவின் நயாகரா” என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்டமான அருவி, அடர்ந்த சோலையார் வனப்பகுதியில் 80 அடி (24 மீட்டர்) உயரத்தில் கொட்டுகிறது. திரைப்பட படப்பிடிப்புகளுக்கு மிகவும் புகழ்பெற்ற இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமாகும்.

athirappalli1

மதியம் 12.30:- மதிய உணவு பின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் அழகை கண்டுகளித்தல்

மாலை 4.30 வால்பாறை திரும்புதல்.

இரவு 8.30:- இரவு உணவு

மறுநாள் காலை 8.00:- மணி காலை சிற்றுண்டி

காலை 11.00 :- Checkout